இன்று உலக புவி தினத்தை முன்னிட்டு கோவையில் "மார்ச் ஃபார் சையின்ஸ்" பேரணி

உலகம் முழுவதும் ஏப்ரல் 22ம் தேதியன்று (இன்று) உலக புவி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலக புவி தினத்தை முன்னிட்டு புவியின் மகிமையினை போற்றும் வகையில் உலகம் முழுவதும் 500 இடங்களில் "மார்ச் ஃபார் சையின்ஸ்" பேரணி நடைபெற்றது. இதில் ஆசியக் கண்டத்தில் 3 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் கோவையிலேயே மார்ச் ஃபார் சையின்ஸ் பேரணி நடைபெற்றது.



கோவை மாவட்டம், ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற இப்பேரணியினை ஸ்கூல் ஆஃப் சையின்ஸ் மற்றும் ராக் அமைப்பு இணைந்து நடத்தியது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சரவணன் பங்கேற்று பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். 

இதுகுறித்து இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் ஸ்கூல் ஆஃப் சையின்ஸ் சாரதா கூறுகையில், விஞ்ஞானம் மூலமாகவே இவ்வுலகில் பல செயல்கள் நடைபெற்று வருகிறது. மக்கள் மத்தியில் விஞ்ஞானம் குறித்து பல்வேறு மன நிலைகள் உள்ளது. இதில் தவறான மனநிலைகளை உடனடியாக தவிர்க்க வேண்டும். வரும் காலங்களில் நடக்கவுள்ள தீமைகளை தடுத்து உலகை காக்கும் சக்தி அறிவியல் விஞ்ஞானத்திற்கு மட்டுமே உள்ளது என்பதை அனைவரும் ஏற்க வேண்டும்" என்றார்.



இதனைத்தொடர்ந்து, கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சரவணன் பேசுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்ச் ஃபார் சையின்ஸ் பேரணி குறித்து பள்ளி மாணவ, மாணவியர்கள் என்னைச் சந்தித்து அனுமதி கோரினர். அவர்கள் எனக்கு இதுகுறித்தான முழுத் தகவலையும் தெரிவித்தனர். 



விளையாட்டு, தொலைக்காட்சி, பொழுதுபோக்கு என்று மாணவர்கள் தங்களது சுயநலத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இச்சமுதாயத்தில் இந்த மாணவர்கள் சமூகநல அக்கறையுடன் என்னைச் சந்தித்தது மகிழ்ச்சியளித்தது. அதனாலேயே உடனடியாக அனுமதியளித்தேன். 



இன்று மட்டும் இன்றி ஒவ்வொரு நாளும் நாம் புவி தினத்தை கொண்டாட வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு நாம் இந்த உலகை அழகான முறையில் விட்டுச் செல்ல வேண்டும். இவ்வுலகில் பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. அவற்றை ஆக்கப்பூர்வமாகவும், அழிவுப்பூர்வமாகவும் பயன்படுத்துவது நம் கையில் தான் உள்ளது" என்றார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற மார்ச் ஃபார் சையின்ஸ் பேரணியில் கல்லூரி முதல் சிறுவயதுடைய ஆரம்பப் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று புவியினை போற்றும் வகையில் பதாகைகளை ஏந்தியவாறு பேரணி சென்றனர். 

ரேஸ்கோர்ஸ் பகுதியில் துவங்கிய இப்பேரணி ரேஸ்கோர்ஸ் பகுதிக்குட்பட்ட அனைத்து வீதிகளின் வழியாகச் சென்று நிறைவடைந்தது.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...